தமிழை வாழவைப்போம் வளரவைப்போம். !

வணக்கம்!
இது எனது முதல் முயற்சி. எண்ணத்தில் தோன்றுவனவற்றையெல்லாம் எழுத வேண்டுமென்று நினைக்கும் போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இப்போதுதான் காலம் கூடிவந்துள்ளதென நினைக்கிறேன்.
தமிழனாய்ப் பிறந்து தரணியிலே எங்கெங்கோ எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகள் இங்கே வலைப்பதிவுகளின் மூலம் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஓர் பிணைப்பில் நானும் இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
"மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்பதெல்லாம் வெறும் சொற்றொடராகவே அழிந்து போய்விடும். ஏனெனில் தமிழ் இங்கே வலைப்பதிவுகளிலே தவழ்ந்து கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு தமிழ் ஈடுகொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிதாகப் படைக்கப்படுகின்ற ஒவ்வோரு தமிழ் படைப்புக்களும் இணையத்தின் உதவியுடன் உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச்செல்லப்படுகிறது.
இதுவே போதும் "மெல்லத் தமிழ் இனிவாழும்" என்ற நம்பிக்கையுடன் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கலாம்.
தமிழை வாழவைப்போம் வளரவைப்போம்.

5 comments:

said...

மெல்லத் தமிழ் இனிவாழும்

வாழ்த்துக்கள் :((

said...

This blog does not allow anonymous comments. :((

//எண்ணத்தில் தோன்றுவனவற்றையெல்லாம் எழுத வேண்டுமென்று நினைக்கும் போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இப்போதுதான் காலம் கூடிவந்துள்ளதென நினைக்கிறேன்.//

ஏன் exam இல்லையா?
:P

said...

உங்களைப் போல் இளைஞர் இருக்கையில் தமிழ் வாழும்.
யாழ்ப்பாணதில் இருந்து எழுதுகிறீர்கள்
மிகச் சந்தோசம்

said...

தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்

said...

தொடருங்கள் வாழ்த்துக்கள்